11.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எஸ் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதுடன் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
- எதிர்வரும் மாதம் 25ம் திகதி நடைபெற இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் NNP - தேசிய வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்விற்கு குச்சவெளி கிளையின் 30 பேர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல்
- பிரதேசத்திலுள்ள கடை உரிமையாளர்களை சந்தித்தல் மற்றும் அவர்களுக்கான தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துதல்.
- குச்சவெளி கிளையின் அலுவலக விடயங்களை கண்கானிப்பதற்காக அலுவலக பொறுப்பாளராக அஷ்-ஷைக் சாஜித் அவர்களை நியமித்ததோடு கிளையின் அலுவலகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09:00 மணி முதல் 11 வரையும் சனி ஞாயிறு தினங்களில் தேவைக்கேற்பவும் திறக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா