2019.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஒன்று  நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இதன் போது கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம் றம்புக்கந்தெனிய ஜுமுஆ பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம் ஸைத் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் முன்னால் தலைவர் அஷ்-ஷைக் உபைதுல்லாஹ் (பலாஹி) சில அனுபவங்களை சபையோர் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

17.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் ஒன்று கூடல் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் நடை பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல் பண்டாரவலை நகர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

18.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம், கொழும்பு கிழக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கொதடுவை ஜப்பார் ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.  இதன் போது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் சம்பந்தமாகவும்,  உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

16.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் நிந்தவூர்  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நிந்தவூர் ஜுமுஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

13.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் மருதமுனை  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் ஹுசைனுத்தீன் அவர்களின் தலைமையில்  இடம் பெற்றது. 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக்  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நிககொல்லை ஜுமுஆ மஸ்ஜிதில்  இடம் பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனையை  எதிர்த்து  ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா