இந்தோனேஷியாவின் இலங்கைக்கான தூதரக பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று 2017.10.23ம் திகதி காலை பதினொரு மணியளவில் விஜயம் செய்தார்கள்.  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் முபாறக், பொருளாலர் அஷ்-ஷைக் கலீல் மற்றும் அஷ்-ஷைக் நவ்பர், அஷ்-ஷைக் தாஸீம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

   இச்சந்திப்பில் இந்தோனேஷியாவின் இலங்கைக்கான தூதரக பிரதிநிதிகள் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்வது சம்பந்தமாக கேட்டறிந்து கொண்டதோடு, ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.