ACJU/MED/2020/005
23.05.2020 / 29.09.1441
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் நோன்புப் பெருநாள் செய்தி
கொவிட் 19 காரணமாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்று, நற்காரியங்களில் ஈடுபட்டு விட்டு இன்று பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்;களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. அல்லாஹுதஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியை தந்தருள வேண்டுமென பிரார்த்தனையும் செய்கின்றது.
எமது நாட்டையும், நாட்டு மக்களையும் கொவிட் 19 யின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வழமை போன்றல்;லாது சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் வழிகாட்டல்களைப் பூரணமாக ஏற்று மிகவும் எளிமையான முறையில் தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் வீட்டில் இருந்த படியே இம்முறை பெருநாளைக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். தொடர்ந்தும் எமது தாய்நாட்டை இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட அல்லாஹுதஆலா அருள் புரிய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வினிய தினத்தில் இஸ்லாமிய போதனைகளை உரிய முறையில் பின்பற்றுவதுடன் முழு உலக மக்களும், குறிப்பாக எமது தாய் நாடும்; இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.
இந்த வைரஸ் தொற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக பாடுபடும் அரசாங்கம், அரச ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் இந்த நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கி வரும் சுகாதார சேவைப் பணியாளர்கள், முப்படைகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இன்றைய இனிய நோன்புப் பெருநாள் தினத்தில் மனமார்ந்த நன்றிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/FTW/2020/05
22.05.2020
28.09.1441
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ
இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகை சம்பந்தமான சில வழிகாட்டல்கள்
الْحْمدُ لِلّهِ
والصّلاَةُ والسّلاَمُ عَلَى مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
واتَّقُوا الله
மேலும், இரு குத்பாக்களில் ஏதாவது ஒன்றில் அல்-குர்ஆன் வசனம் ஒன்றை ஓதுதல். இரண்டாவது குத்பாவில் اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِ என்று கூறி முஃமின்களுக்காக துஆச் செய்து குத்பாவை நிறைவு செய்தல் வேண்டும். மாதிரி குத்பா இணைக்கப்பட்டுள்ளது.
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
மாதிரி பெருநாள் குத்பா
முதலாவது குத்பா :
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ وَالصًّلاَةُ وَالسَّلَامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلّى الله عَلَيْهِ وَسَلًّمَ. أٌمّا بَعْدُ
يَا أًيُّهَا النَّاسُ اتَّقُوا الله قَالَ الله تَعَالىَ أَعُوْذُ بِالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
وقال النبي صلى الله عليه وسلم قال: ((الدِّين النَّصِيحَةُ))
أَسْتَغْفِرُ اللهَ لِيْ وَلَكُمْ فَاسْتَغْفِرُوْهُ إنَّهُ هُوَ الغَفُوْرُ الرَّحِيْمُ
இரண்டாவது குத்பா :
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ وَالصلاة والسَّلَامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. أمَّا بَعْدُ
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللهَ قَالَ اللهُ تَعَالى أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
وَارْضَ اللّهُمَّ عَنِ الخُلَفَاءِ الأَرْبَعَةِ وَجَمِيْعِ الصَّحَابَةِ رَضِيَ اللهُ عَنْهُمْ أَجْمَعِيْنَ.
اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِ والمُسْلِمِينَ والمُسْلِمَاتِ
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ
ACJU/MED/2020/003
19.05.2020
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மரண செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த கால்விமான்களில் ஒருவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் இன்று (19.05.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.
தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காக செலவழித்த இவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோடு நல்லுறவோடு இருந்து வந்தார்கள். தேவையான போது நல்லாலோசனைகளையும் தருவதில் பின் நிற்கவில்லை. உலமா சபை நடாத்திய பல மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.
பன்னூல் ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்கள். பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்த இவர்கள் நடுநிலையான போக்கோடும், உலமாக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்போடும் இருந்து வந்தார்கள்.
ஜாமிஆ நளீமிய்யாவுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/MED/2020/002
17.05.2020
ரமழானின் இறுதிப் பகுதி மற்றும் பெருநாள் தினம் தொடர்பான வழிகாட்டல்கள்
கொவிட் 19 வைரஸின் பரவலுக்கு மத்தியில் இம்முறை நாம் எமது ரமழான் நோன்புகளை நோற்று வந்து, தற்போது ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.
ரமழான் மாதாத்தின் இறுதிப் பகுதி தொடர்பானவை:
பெருநாள் தினம் தொடர்பானவை:
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது நல்லமல்களையும் நோன்பையும் பொருந்திக் கொண்டு, இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை பொருத்தமான ஒரு நேரத்தில் அதானுக்குப் பிறகு மஸ்ஜித் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு சகல மஸ்ஜித் நிர்வாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்ளும் அதேநேரம் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சகலரும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
09.05.2020
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
இவ்வருடம் ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள்
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
07.05.2020
Dr. அனில் ஜயசிங்க
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே,
கொவிட்-19 தொற்று காரணமாக மரணித்து தகனம் செய்யப்பட்ட ஒரு முஸ்லிமின் சாம்பலை புதைப்பதில் உள்ள தெளிவற்ற நிலை தொடர்பான விளக்கம் மற்றும் அவ்வாறு மரணித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து தங்களது தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளல்
இலங்கையில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த, இந்த சவாலான காலங்களில் அயராது உழைத்து, பணிபுரியும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், குறிப்பாக தாங்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையில், நீங்களும் உங்கள் குழுவும் தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் இப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களின் படி மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றதன் படி கொவிட்-19 காரணமாக இறந்த ஒரு முஸ்லிம் அடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எமது மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம். ஏனெனில், இது எங்கள் விசுவாசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அத்துடன் இறந்தவர்களுக்கு சமூகத்தால் செய்யப்படக் கூடிய ஒரு மார்க்கக் கடமையுமாகும்.
ஆரம்பத்தில் இருந்தே, நாங்கள் இந்த விஷயத்தை உரிய அதிகாரிகளுக்கு அழகிய முறையில் வலியுறுத்தி வரும்; அதேநேரம் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தகவலுக்காக இது தொடர்பாக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆரம்பத்தில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் (JMO) வெளியிடப்பட்ட SOP யில் கொவிட்-19 வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கோரி அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு மார்ச் மாதம் 24ந் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. எங்களது கோரிக்கையையும் ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, அடக்கம் செய்வதற்கான அனுமதியுடன் மார்ச் மாதம் 27ந் திகதி “கொவிட்-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கையாளுதல் விடயத்தில் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்” (Provisional Clinical Practice Guidelines on COVID-19 suspected and confirmed patients) என்ற ஆவணம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.
என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, மார்ச் மாதம் 31ந் திகதி மேலே குறிப்பிடப்பட்ட ‘வழிகாட்டல்கள்’ திடீரென திருத்தப்பட்டு எவ்வித விஞ்ஞான ரீதியான காரணங்களும் நியாயங்களும் முன்வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்படுவதற்கான அனுமதி நீக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் 01ந் திகதி, இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நமது கவலையையும் கண்டனத்தை வெளிப்படுத்தியும், அடக்கம் செய்வதற்கான அனுமதியளித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலுக்கு ஏற்ப அரசாங்கத்தின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் ஒரு அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் இது சம்பந்தமான விடயங்களைக் கலந்துரையாட மருத்துவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளுடனான இக்குழுவின் கலந்துரையாடல்களுக்குப் பின், இவ்விடயத்தில் ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வு நடாத்த நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. என்றாலும், அது நடைபெற்றதாக தெரியவில்லை.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில் எப்போதும் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றே எமது சமூகத்தினருக்கு வழிகாட்டியுள்ளது. இந்தச் சூழலில், அதிகாரிகளால் நிர்ப்பந்தமாக மரணித்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் நிலையில் மரணித்தவரின் சாம்பல் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது புதைக்கப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது.
மரணித்தவரை தகனம் செய்யும் இந்த முடிவு நமது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது மிகத் தெளிவான விடயமாகும். இந்த விஷயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் துறைசார்ந்தவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான சடலங்களை தகனம் செய்யப்பட வேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மற்றும் 180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு ஏற்ப, மறுபரிசீலனை செய்யுமாறு தங்களிடம் மீண்டுமொரு முறை வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், அனைத்துவித கட்டாயமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பொலிஸ், பொது சுகாதார அதிகாரி (PHI) மேற்பார்வையுடன் சடலங்களை புதைப்பதற்குரிய அனுமதியையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இது முஸ்லிம்களின் மத ரீதியான மற்றும் உணர்வு ரீதியான விடயமாகும். எனவே இவ்விடயத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் உரிய தீர்வை பெற்றுத்;தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். மேலும், 08 அடி ஆழத்தில் கல்லறைத் தோண்டுவது போன்ற, தேவையான அனைத்து விடயங்களையும் முஸ்லிம் சமூகம் செய்யத் தயாராகவுள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். தேவைப்பட்டால் கல்லறையை சீமெந்து மூலம் கொன்கிறீட் போடுவது அல்லது வேறேதும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை தேவைக்கேற்ப செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்றது.
இது தொடர்பாக நீங்கள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுச் சார்பாக
அஷ்-ஷைக் ஏ.ஸீ. எம். அகார் முஹம்மத்
பிரதித் தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.ஐ.எம். கலீல்
பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல்காலிக்
உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ஹாஷிம்
உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா
உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.எம்.எம். அனஸ்
உப பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் அர்க்கம் நூராமீத்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஹஸன் பரீத்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் முப்தி எம்.எச்.எம். யூசுப்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.கே. அப்துர்ரஹ்மான்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர்ரஹ்மான்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஹஸ்புல்லாஹ்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஸரூக்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் Dr. அஸ்வர்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஸகி அஹ்மத்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் நுஃமான்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் Dr. எம்.எல்.எம். முபாறக்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். பரூத்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.ஏ.ஏ.எம். பிஸ்ர்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா