2021 ஜூலை மாதத்திற்கான கிளைச் செய்திகள்

ஆக 13, 2021

2021.07.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிரதேசக் கிளையின் 2021 ஜூலை மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் அக்கிளையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் ஹபரவௌ எதுன்கஹகொட்டுவையில் நடைபெற்றது.

2021.07.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்களின் விஷேட கலந்துரையாடல் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் அதன் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.07.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக்கிளையின் மாதாந்தக் கூட்டம் அக்கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர். ஃபரீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.07.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் அக்கரைப்பற்று பிரதேசக் கிளையும், புத்தளம் அக்கரைப்பற்று மஸ்ஜித்கள் சம்மேளனமும் இணைந்து இரு வாரங்களுக்கு மேலாக முடக்கத்திற்குட்பட்ட மாதம்பை பிரதேச மக்களுக்கான பணம் உட்பட தேங்காய், அரிசி, சீனி, மா போன்ற பதினொரு இலட்சம் ரூபாய் அளவு பெறுமதியான நிவாரண பொருட்கள் சிலாபம்-மாதம்பை பிரதேசக் கிளை மற்றும் மாதம்பை ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன.

2021.07.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்ட நிர்வாகக் குழுவின் மாதாந்தக் கூட்டம் மாவட்ட தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.


2021.07.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையினருக்கும் புத்தளம் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி அவர்களுக்கும் இடையில் சமூக, சமய விவகாரங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று புத்தளம் மாவட்டக் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.07.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா புதுக்கடை முஹம்மதிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் அக்கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.07.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ஷுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.07.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். நுஹ்மான் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் வத்தளை, கதீஜா மகளிர் அரபுக்கல்லூரி காரியாலயத்தில் நடைபெற்றது.

2021.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுலுகம பிரதேசக் கிளை ஜம்இய்யாவிற்கு சொந்தமான காணியில் ஜம்இய்யாவிற்கென்றே ஒரு தனிக்கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் மஸ்ஜித் பிலால் பள்ளிவாசலில் நடைபெற்றது.

2021.07.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்ட பூகொட பிரதேசக் கிளையின் காரியாலய திறப்பு நிகழ்வு கம்பஹா மாவட்ட ஜம்இய்யாவின் மூத்த ஆலிம்களின் ஒருவரான அஷ்-ஷைக் அப்துஸ் ஸலாம் மற்றும் பூகொட ஜுமுஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ஸப்வான் அவர்கள் மூலம் நடைபெற்றது.

2021.07.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டத்தின் 4 பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்களுடனான விஷேட கலந்துரையாடல் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஷுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் கிளைகளின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும், நடைபெறவுள்ள புதிய நிர்வாகத் தெரிவு விடயமாகவும் கருத்துக்கள் பெறப்பட்டது.

2021.07.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டத்தின் கல்விக்குழு ஏற்பாட்டில் கம்பஹா மற்றும் களனி வலயத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடன் விஷேட கலந்துரையாடலொன்று திஹாரி தாருஸ் ஸலாம் பாடசாலையில் நடைபெற்றது.

Last modified onவெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021 08:21

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.