ACJU/SOC/2022/08
2022.12.27 (1444.06.02)
அனைத்து விதமான சோதனைகளிலிருந்தும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா, எம்மனைவரையும் பாதுகாத்தருள்வானாக!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் நமது நாடும் நாட்டு மக்களும் அதிகமான இழப்புக்களைச் சந்தித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இந்நிலையில் கடந்த 2022-12-24 ஆம் திகதியன்று பெய்த கடும் மழையால் அக்குறணை நகரத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதம் பல நூறு கோடிகளைத் தாண்டியுள்ளதாக அறிய முடிகிறது.
அக்குறணை வாழ் மக்களைப் பொறுத்தவரை, நாட்டில் ஏற்பட்ட அனைத்துவிதமான நெருக்கடிகளின் போதும் ஜம்இய்யாவுடன் இணைந்து, உதவிக்கரம் நீட்டி வந்தவர்கள். இனமத பேதமின்றி நாட்டின் நாலா புறத்திலுள்ளவர்களுக்கும் பெருந்தொகையான, பெறுமதியான உதவிகளைச் செய்து வந்தவர்கள் என்பதை ஜம்இய்யா நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் நிலைமைகள் சீரடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறது.
இன்று அந்த மக்கள் வரலாறு காணாத பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனைவரும் தம்மாலான நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்கி, இப்பொருளாதார இழப்பிலிருந்து வெகுசீக்கிரம் அவர்கள் மீண்டு வர உதவுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் தயவாய் வேண்டிக் கொள்கின்றது. அத்துடன் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றது.
உங்களது நிதி உதவிகளை வழங்க விரும்புவர்கள் பின்வரும் வழிகளில் வழங்கலாம் :
01. அக்குரணை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் அல்லது அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா காரியாலயத்தில் ஒப்படைக்கலாம். அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச் சீட்டினை 0777 467171 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்.
AKURANA JAMIYYATHUL ULAMA - Disaster Relief Fund
0100115399001 Amana Bank - Akurana Branch
02. மேலும்,கண்டி தெய்யன்னவெல சுதும்பொல ஆகிய பகுதிகளில் சுமார் 300 வீடுகளும் அதிலுள்ள பொருட்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. எனவே, அவர்களுக்கான உதவிகளை, கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு உதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
Bank Account Details: Katukelle Jumma Masjid
Amana Bank, Kandy Branch
0010033850002
03. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையக காரியாலயத்தில் ஒப்படைக்கலாம். அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச் சீட்டினை 0777121767 என்ற வட்சப் இலக்கத்திற்கு அக்குரணைக்குரியது என குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005000
Commercial Bank - IBU Branch
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110014
Amana Bank - Main Branch
மேலதிக தொடர்புகளுக்கு – அக்குரணை 0777467171, 0773841409, 0772492609, 077807070, 0767444327
தலைமையகம்: 0117490490 – 0777571876
ACJU/NGS/2022/250
2022.08.02 (1444.01.03)
وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ وَاَحْسِنُوْا ۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான். (2:195)
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( قال الله : أَنْفِق يا ابن آدم أُنْفِق عليك ) رواه البخاري ومسلم
''ஆதமின் மகனே! (மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு. உனக்கு நான் செலவிடுவேன்' என்று அல்லாஹுதஆலா கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்குவது அல்லாஹ்வின் பொருத்தமும், உதவியும் எமக்குக் கிடைப்பதற்கும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் காரணமாக அமைகின்றன.
ஆதலால், சிறப்பான இம்முஹர்ரம் மாதத்தில் வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், தங்களது உதவிகளை பண ரீதியாக மேற்கொள்ள விரும்புபவர்கள் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் அல்லது கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளை ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு அப்பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.பவாஸ் (0777-571876) அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா