ACJU/NGS/2021/093
நாளை (2021.06.10) வியாழக்கிழமை இன்ஷா அல்லாஹ் வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இச்சூரிய கிரகணம் உலகில் சில இடங்களில் வலைய சூரிய கிரகணமாகவும் இன்னும் சில இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகவும் தென்படும் எனவும், இலங்கையில் இக்கிரகணம் தென்படமாட்டாது எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை சுன்னத்தாகும். குறித்த கிரகணம் எமது நாட்டில் தென்படமாட்டாது என்பதால் நமக்கு கிரகணத் தொழுகை ஸுன்னத்தாக மாட்டாது.
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொது செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2021/085
26.05.2021 CE / 13.10.1442 AH
புறநிழல் சந்திர கிரகணம் தொடர்பாக
இன்று (26.05.2021) புதன்கிழமை இன்ஷா அல்லாஹ் பூரண சந்திரக் கிரகணம் (Total Lunar Eclipse) ஏற்படவுள்ளதாகவும் அது இலங்கைக்கு புறநிழல் சந்திர கிரகணமாகவே (Penumbral Lunar Eclipse) ஏற்படவுள்ளது எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இப்புறநிழல் சந்திர கிரகணம் கொழும்பு நேரப்படி 19:20 மணியுடன் முடிவுறுவதாகவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புறநிழல் கிரகணத்தின் போது சந்திரனின் வெளிச்சத்தில் மங்கலான ஒரு நிலையே ஏற்படும். சந்திரன் பூரணமாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ மறைவதில்லை. சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதை காணும் போதுதான் கிரகணத் தொழுகை சுன்னத்தாகும். மாறாக, புறநிழல் கிரகணத்தின் போது கிரகண தொழுகை சுன்னத்தாகமாட்டாது.
'சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. ஆகவே அவை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொது செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஹிஜ்ரி 1438.11.09 (2017.08.02)
ஊடக அறிக்கை
சந்திரக் கிரகணம்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்; 07.08.2017 ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் (Partial Lunar Eclipse) ஏற்படவுள்ளதாகவும் இதனை கொழும்பு (நேர வலையம் 5.5) நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரை இலங்கையில் பார்க்கலாம் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)
எனவே கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித் தொழுகுமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்வதோடு அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் சம்மந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா