அஷ்-ஷைக் ஏ.டபிள்யூ.எம். ரிஸ்வி பஹ்ஜி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

அக் 21, 2024

ACJU/NGS/2024/397
2024.10.21 (1446.04.17)

மாத்தளை - உக்குவெலப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்-ஷைக் ஏ.டபிள்யூ.எம். ரிஸ்வி பஹ்ஜி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் கடந்த வியாழக்கிழமை 2024.10.17 ஆம் திகதி வபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

இவர்கள், காலிக் கோட்டை - அல் பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா அரபுக்கல்லூரியில் மார்க்கக் கல்வியைப் பயின்று அல்-ஆலிம் பட்டம்பெற்று, அதே கல்லூரியில் உஸ்தாதாகவும் அதிபராகவும் கடமையாற்றியதுடன், மாத்தளை ஹலீமிய்யா அரபுக்கல்லூரி, உடதலவின்ன ஹக்கீமிய்யா அரபுக்கல்லூரி, மாத்தளை - கெடவெல யூஸுபிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அடுலுகம இன்ஆமுல் ஹஸன் அரபுக்கல்லூரி ஆகியவற்றில் உஸ்தாதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - ஹலால் பிரிவில் ஷரீஆ ஆலோசகராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - மாத்தளை மாவட்டக் கிளையின் செயலாளராக நீண்டகாலம் செயலாற்றியதுடன் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமய, சமூக மற்றும் கல்விப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார்கள்.

இவ்வேளையில் அன்னாருடைய மனைவி, மக்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு சார்பிலும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

 

அஷ்-ஷைக் ஏ. எல். எம். ரிழா

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.