அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதவிதாங்குனர்களுக்கான பொதுக் கூட்டம் - 2022

ஜூன் 22, 2022


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான பொதுக்கூட்டம் கடந்த 2022.06.18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு கண்டி கட்டுகலை ஜுமுஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.


புர்கானிய்யா அரபுக் கல்லூரியின் உஸ்தாத் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இககூட்டத்தில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் கே.எம். அப்துர் ரஹ்மான் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் கடந்த மூன்றாண்டுக்கான செயற்பாட்டறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களால் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் தலைமை உரை ஜம்இய்யாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாப்பு திருத்தத்தங்களுக்கான அங்கீகாரம் பெறும் நிகழ்வு நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் மற்றும் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் ஆகியோரால் நடாத்தப்பட்டது.


பின்னர் ஜம்இய்யாவின் அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ சாப்ட்வெயார் (மென்பொருள்) அறிமுகம் (http://membership.acju.lk/) நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர் அவர்களால் நடாத்தப்பட்டதோடு, தற்கால சூல்நிலையை கருத்திற் கொண்டு பின்வரும் தலைப்புக்களை உள்ளடக்கிய ஒரு பிரகடனம் (https://acju.lk/news-ta/acju-news-ta/item/2603-pirakadanam-tam) நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் சமூக சேவைக் குழு செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களால் வாசிக்கப்பட்டது:


01. சமூக ஒற்றுமை
02. சகவாழ்வு
03. இளைஞர்கள்
04. பொருளாதார நெருக்கடி


அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மொழியிலான அல்-குர்ஆன் ஜுஸ்உ அம்ம விளக்கவுரை வெளியிடப்பட்டதோடு, அதன் அறிமுகம் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் பத்வாக் குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் பிரதிகள் ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரால் பின்வரும் மூத்த உலமாக்களுக்கு வழங்கப்பட்டன:


01. அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். ஹாஜா முஹ்யுத்தீன் ஹழ்ரத்
02. அஷ்-ஷைக் அப்துல் காதர் ஹழ்ரத்
03. அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
04. அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத்


இறுதியாக நன்றியுரை உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களால் நடாத்தப்பட்டதோடு, அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத் அவர்களின் துஆ, ஸலவாத் மற்றும் கப்பாரத்துல் மஜ்லிஸுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 22 ஜூன் 2022 11:58

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.