ACJU/NGS/2022/006
2022.01.09 (1443.06.05)
அஷ்ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி
மதவாக்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை ஃபாஸிய்யத்து ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவாகிய அஷ்ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இன்று (2022.01.09) தனது 66 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
காலி கோட்டை பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரி, மதவாக்குளம் ஷரபிய்யா அரபுக் கல்லூரி மற்றும் உம்மு ஸாவியா மஸ்ஜிதில் அமைந்துள்ள அஜ்வத் அல் ஃபாஸி அரபுக் கல்லூரி ஆகியவற்றின் பணிப்பாளராகவும், கொழும்பு உம்மு ஸாவியா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின் பிரதான கதீபாகவும் இருந்த அவர்கள், ஆரம்ப காலம் முதல் சமூகத்துடன் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னார், 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக செயற்பட்டு சமூகத்துக்கு பாரிய பணிகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ{தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா