2017-11-17
முக்கிய அறிவித்தல்
காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் மட்ட தலைவர்கள் அரசாங்கத்துடனும் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஆவண செய்துவருகின்றனர்.
ஜம்இய்யாவின் கௌரவ தலைவர், பிரதித் தலைவர் உட்பட முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் முடியுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இத் தருணத்தில் அனைவரும் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் துஆ, இஸ்திஃபார், போன்ற இபாதத்களில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா