பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
எனவே, ரமழானின் கடைசி அரைப் பகுதியில் வித்ரு தொழுகையில் ஓதப்படும் குனூத்தை அளவுக்கு அதிகமாக நீட்டி ஒதுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்க விடயம் என்பதால், குனூத்தை அளவுக்கு அதிகமாக நீட்டாமல் சுருக்கமாக ஓதிக் கொள்வது சிறந்ததாகும். அதே போன்று இதற்காகவே பிற ஊர்களில் இருந்து ஆலிம்களை வரவழைப்பது பொருத்தமற்றதாகும். மேலும், றமழானுடைய காலத்தில் ஓதப்படும் குனூத்;தில் சிறமப்பட்டு அளவு கடந்து ராகம் எடுத்தல், தொழுகையை பாதிலாக ஆக்கும் அளவுக்கு அழுதல் போன்றவைகள் நடைபெருவதையும் அவதானிக்க முடிகின்றது. இவைகளும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
கால நேரம் குறிப்பிடப்படாத பொதுவான சுன்னத்தான நோன்புகளை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் மாத்திரம் நோற்பது மக்ரூஹாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு அந்நாட்களில் ஒருவர் நோன்பு நோற்பதாயின் அதற்கு முந்திய தினத்துடன் அல்லது அதற்குப் பிந்திய தினத்துடன் சேர்த்து நோற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளனர். ஏனைய வகை நோன்புகளைப் பொருத்தவரையில் வெள்ளிக் கிழமை அல்லது சனிக்கிழமை தினத்தில் மாத்திரம் நோற்கவேண்டி ஏற்பட்டாலும் அவற்றை நோற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அவை ஹதீஸ்களில் தடைசெய்யப்பட்டுள்ள வகையில் சேரமாட்டாது.
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
முஹர்ரம் மாதம் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் அல்லது 11 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும். இன்னும், 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும். அதேவேளை ஒருவர் 10 ஆவது நாளில் மாத்திரம் நோன்பு நோற்றுக் கொள்வதாயின் அதற்கும் அனுமதியுள்ளது.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
இவ்வடிப்படையில், ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தின் பிரகாரம் COVID 19 பரிசோதனையில் மூக்கிலும் வாயிலும் செலுத்தப்படும் கருவி மேற்குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை என இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் உறுதிபடக் கூறுவதால் இவ்வாறு பரிசோதனை செய்வதால் நோன்பு முறியாது. எனினும், ஏதேனுமொரு விதத்தில் மேற்கூறப்பட்ட எல்லையை குறித்த கருவி தாண்டியது உறுதியாகத் தெரிந்தால் நோன்பு முறிந்து விடும். அதனைப் பிரிதொரு தினத்தில் கழா செய்து கொள்ள வேணடும்.
இதை மதிப்பிடுங்கள்
(9 votes)
ஷஃபான் மாதம் 15ம் நாளில் விஷேடமாக நோன்பு நேற்பது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதார பூர்வமான ஹதீஸாக இல்லாவிட்டாலும், அந்நாளில், மேற்குறிப்பிட்டதன் பிரகாரம், ஷஃபான் மாதத்தின் பொதுவான சுன்னத்தான நோன்பு என்ற அடிப்படையிலோ அல்லது 13,14,15 ஆகிய ஐயாமுல் பீழ் உடைய நாட்கள் என்ற அடிப்படையிலோ அல்லது வழமையாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் என்ற அடிப்படையிலோ நோன்பு நோற்கலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
றமழானுடைய மாதம் ஏனைய பிறை மாதங்களைப் போன்று இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும். அவ்வாறு இருபத்தெட்டாவது தினம் ஷவ்வால் பிறை தென்பட்டது நிரூபிக்கப்பட்டால், பெருநாள் கொண்டாடிவிட்டு இன்னும் ஒரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வது அவசியமாகும்.