பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(12 votes)
இவ்வடிப்படையில் சோளதில் ஸக்காத் கடமையாகுவதற்கான அளவு 720 கிலோ கிராம்களாகும். (அதாவது சோளத்தின் இலையும் அதன் மட்டையும் நீக்கப்பட்டு வித்து மாத்திரம் நிறுக்கப்படல் வேண்டும்) சோளத்திற்கு ஸக்காத் கொடுக்கும் பொது அறுவடை செய்யும் சந்தர்பத்தில் கிடைக்கப் பெறும் அனைத்து சொளகத்தையும் நிறுத்து ஸகாதின் அளவை நிர்னயம் செய்ய வேண்டும்;. பயிர் செய்யும் வேளையில் ஏற்படும் செலவினத்தையோ, கிருமி நாசினி மற்றும் பசளைகளின் கொள்வனவையோ, அல்லது அறுவடை செய்தல் போன்ற தேவைகளுக்கான செலவுகளையோ கழித்து ஸகாத்தின் அளவை கனிக்க முடியாது. இது பற்றி இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றார்கள் : பேரீத்தம் பழத்தைக் காயவைத்தல், அறுவடை செய்தல், தானியத்தை சுமத்தல், சூடடித்தல், தூசி நீக்குதல், மேலும் களஞ்சியப்பத்தல் போன்ற செலவுகள் உரிமையாளரின் செலவிலிருந்தே கொடுக்கப் படல் வேண்டும். ஸகாத் பணத்திலிருந்து அவை கழிக்கப்படமாட்டாது என்ற விடயத்தில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில், இது போன்ற செலவுகள் இருந்தும் ஸகாத்தின் அளவில் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்படும் செலவீனம் மாத்திரமே ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது.
இதை மதிப்பிடுங்கள்
(10 votes)
தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்தில் கழித்து அதை தான் கொடுக்கும் ஸக்காத்தாக மாற்றுவது சம்பந்தமாக பத்வாக் கோரி 2009.08.10 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக! ஸக்காத் எண்ணமும் செயலும் ஒருங்கே சம்பந்தப்பட்ட ஓர் இபாதத் ஆகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும். ஸக்காத் பெற தகுதியான ஒருவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத் கொடுக்க கடமைப்பட்டவர் ஸக்காத்துக்கு பகரமாக கழித்து விடுவது மேற்சொல்லப்பட்ட ஸக்காத் கொடுக்கும் முறைக்கு முரண்பட்டதாகும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நடைமுறையில் பொருள், பணம் ஸக்காத்தாக கையளிக்கப்பட வேண்டும். அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு இயம்புகிறான்: “நபியே! அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸக்காத்தை) எடுப்பீராக!” (09 : 103) மேலும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முஆத் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த சமயத்தில் பின்வருமாறு கூறினார்கள்: “அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஸக்காத்தை அவர்களின் செல்வங்களில் அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என அவர்களுக்கு நீர் அறிவிப்பீராக!” (நூல்: சஹீஹ் அல்-புகாரி, பாடம்: ஸக்காத் கடமையாதல், அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூமா) மேற்படி அல்-குர்ஆன் வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஸக்காத் கைக்குக்கை மாறுவது செயலில் நடைபெறவேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவேதான் இமாம்களான ஷாபிஈ, அபூ ஹனீபா, அஹ்மத் (ரஹிமஹூமுல்லாஹ்) ஆகியோரும் இன்னும் பல இமாம்களும் ஒருவர் தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்திற்கு பகரமாக கழித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்.
இதை மதிப்பிடுங்கள்
(5 votes)
தங்கம், வெள்ளி, கால் நடைகள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றில் ஸக்காத் கடமையாவதற்கு (12 அரபு மாதங்களைக் கொண்ட) ஒரு வருடம் பூர்த்தியடைதலும் ஒரு நிபந்தனையாகும். மேற்படி பொருட்களில் ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கடமையாகும். இதுவே நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், சஹாபிகளது பொதுவான நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது. எனவே, ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.
இதை மதிப்பிடுங்கள்
(15 votes)
என்றாலும், அதிகமான பெண்கள் கறுப்பு நிற ஆடைகளைத் தெரிவுசெய்து அணிகின்றனர். காரணம் கறுப்பு நிற ஆடைகள் சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான ஓரு ஆடையாகும் என்பதனாலும், இந்நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையில் கறுப்பல்லாத ஏனைய நிறங்களைத் தெரிவு செய்வதில் சிரமம் இருப்பதனாலுமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், யமனிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கடிதம் மூலம் மரக்கறிக்கு ஸகாத் கடமையாகுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்;கள் அதில் கடமையாகாது என்று கூறினார்கள். (ஸுனன் அல்-திர்மிதி) இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடர் பலவீனமா இருந்தாலும், இதுவே அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்து என்று இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகின்றார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(7 votes)
பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தின்படி ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் போது பிரதான உணவாகக் கொள்ளப்படும் தானிய வகையில் இருந்து கொடுத்தல் வேண்டும். இதனை நிறைவேற்றும் போது ஒவ்வொருவரும் ஒரு ஸாஃ அளவு வீதம் கொடுத்தல் வேண்டும். ஒரு ஸாஃ என்பது 2.4 கிலோ கிராமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
'பீஸபீலில்லாஹ்' என்ற பதம் பொதுவான கருத்துடையதாகும். அதன் நேரடியான பொருள் 'அல்லாஹ்வின் பாதையில்' என்பதாகும். மஸ்ஜிதுக்கு தொழுவதற்காக செல்லும் செயலிலிருந்து அல்லாஹ்வின் பாதையில்..
இதை மதிப்பிடுங்கள்
(7 votes)
நெல்லுக்கு ஸக்காத் கொடுக்கும் பொழுது பயிர் செய்யும் வேளையில் ஏற்படும் செலவினம் மேலும் விதை நெல், கிருமி நாசினி மற்றும் பசளைகளின் கொள்வனவு, அறுவடை செய்தல், உழவு இயந்திரக் கூலி போன்ற தேவைகளுக்கான செலவுகளைக் கழித்ததன் பின் எஞ்சியுள்ள நெல்லுக்கு மாத்திரம் ஸகாத் கொடுத்தாற் போதுமாகும் என்ற விடயத்தில் நான்கு மத்ஹப்களையும் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் உட்பட அதிகமானவர்கள் 'விளைச்சல் மற்றும் அறுவடைச் செலவுகளைக் கழித்து ஸகாத் கொடுக்க முடியாது என்றும், அறுவடை செய்யும் பொழுது கிடைக்கப் பெறும் மொத்த நெல்லுக்கே ஸகாத் கொடுக்க வேண்டும்' என்றும் கூறுகின்றனர்.
இதை மதிப்பிடுங்கள்
(5 votes)
ஒருவர் வியாபாரத்தை ஆரம்பித்து ஒரு வருடம் (சந்திர வருடம்) பூர்த்தியாகும் நேரத்தில், அவரது வியாபராப் பொருட்கள், பணம் மற்றும் வரவேண்டிய வியாபாரக் கடன்கள் போன்றவை ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவை (நிஸாபை) அடைந்திருந்தால் அவர் ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அவர் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொழுது ஸகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) விடக் குறைவாக இருந்தாலும் சரி. கடலை வியாபாரம், வாழைப்பழ வியாபாரம், போன்ற சிறு வியாபாரங்களிலும் மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் இருந்தாலே அன்றி ஸகாத் கடமையாகாது.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
முஅத்தின் அதிகாரிகளுக்கு ஸக்காத்தில் குறிப்பாக ஒரு பங்கு குறிப்பிடப்படவில்லை. அவர்கள் மேற்கூறப்பட்ட, அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் கூறும், ஸக்காத் பெறத் தகுதியான பிரிவினர்களில் பரம ஏழை, ஏழை, கடனில் மூழ்கியவர்கள் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் கொடுக்கலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(9 votes)
எட்டுக் கூட்டத்தினருக்கே ஸக்காத் வழங்கப்படல் வேண்டும். அன்றி, ஸக்காத் பணத்திலிருந்து ஜனாஸா வாகனத்தை பராமரித்தல் போன்ற தேவைகளுக்கு வழங்க முடியாது. இதற்கு ஸக்காத் அல்லாத ஸதகா, வக்ப், அன்பளிப்பு போன்றவற்றின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதை மதிப்பிடுங்கள்
(7 votes)
பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள் பரம ஏழை, ஏழை, கடனாளி போன்ற அல்-குர்ஆனில் கூறப்பட்ட கூட்டத்தினர்களில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் வழங்கலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(7 votes)
எட்டுக் கூட்டத்தினருக்கே ஸக்காத் வழங்கப்படல் வேண்டும். அன்றி, மத்ரஸா அல்லது மஸ்ஜித் நிர்மாணித்தல் போன்ற தேவைகளுக்கு வழங்க முடியாது. இதற்கு ஸக்காத் அல்லாத ஸதகா, வக்ப், ஹிபத் போன்றவற்றின் கதவுகள் திறந்தே உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதை மதிப்பிடுங்கள்
(7 votes)
ஷரீஆவைக் கற்கும் மாணவர்களுக்குக் குறிப்பாக ஸக்காத்தில் ஒரு பங்கு இல்லை. மாணவர்களில் பருவமடையாதவர்களது பெற்றோர்கள் ஏழைகளாக இருப்பின் அம்மாணவர்களுக்கு ஏழைகளுக்குரிய பங்கிலிருந்து கொடுக்க முடியும். அவர்கள் பணக்காரர்களாக இருப்பின் தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளைப் பொறுப்பேற்றல் வேண்டும்.
இதை மதிப்பிடுங்கள்
(8 votes)
'(ஸக்காத் என்னும்) தானங்கள் ஃபக்கீர்களுக்கும், மிஸ்கீன்களுக்கும், அதன் உத்தியோகத்தர்களுக்கும், இஸ்லாத்தின்பால் இணக்கமானோருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்'. (09:60)
இதை மதிப்பிடுங்கள்
(11 votes)
ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
வெள்ளியின் பெறுமதியை வைத்து ஸக்காத்தின் பெறுமானத்தை தீர்மானிப்பதே பொருத்தமானதாகும். ஏனெனில் அதனால் மிக அதிகமானோர் மீது ஸக்காத் கடமையாவதுடன் அதிகமான ஏழைகள் அல்லது ஸக்காத் பெறத் தகுதி உடையவர்கள் பயன் பெறுவர்.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
வியாபாரப் பொருட்களுக்கு அரபு வருடம் பூர்த்தி அடைவதுடன் ஸக்காத் கடமையாகும். ஸக்காத் விதியாகும் நேரத்தில், அவ்விடத்தில் நடைமுறையில் உள்ள சந்தையின் வியாபார விலையைக் கொண்டு பெறுமானத்தை நிர்ணயிக்க வேண்டும். இதுவே பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.