பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(5 votes)
கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்துச் செய்வதற்கான முடிவுக்கு வருவதற்குமுன் அவர்களைச் சமாதானம் செய்துவைப்பது குடும்ப உறவினர்களின் கடமையாகும். இதன் அடிப்படையில், இரு தரப்பினர்; சார்பாகவும் இரண்டு நபர்கள், அந்தக் கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிணக்கை நல்லுபதேசம், ஆலோசனைகள் மூலம் தீர்த்துவைக்க முயற்சி செய்தல் வேண்டும். அத்துடன், தலாக்கின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைத் தெளிவுபடுத்தி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு கணவன் மனைவியின் பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக இரண்டு நபர்களை அனுப்புவது கட்டாயமாகும் என பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றால், இறுதித் தீர்மானமாக அவர்கள் தலாக், பஸ்கு மற்றும் குல்உ ஆகியவற்றில் மிகப்பொருத்தமான ஏதாவது ஒன்றின் மூலம் விவாக ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துணவர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். "இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்" என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா றழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : ஸஹீஹ முஸ்லிம் : 1469)
இதை மதிப்பிடுங்கள்
(9 votes)
மனைவி கணவனின்; விளை நிலம் ஆவாள். கணவன் விரும்பும் அனைத்து விதத்திலும் அவளுடன்; இன்பம் அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. என்றாலும், மாதவிடாய், பிள்ளைப் பேறு காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளல்; மற்றும் அவளது ஆசன வாயில் உடலுறவு கொள்ளல் ஆகியவற்றை இஸ்லாம் தடுத்துள்ளது.
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
உடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(8 votes)
கணவன் மனைவியை உடலுறவுக்காக அழைக்கும் போது தகுந்த காரணம் இன்றி இணங்காமலிருப்பது அவள் மீது ஹராமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒருவர் தனது மனைவியை உடலுறவுக்காக அழைத்து, அதற்கவள் மறுத்து, கணவன் அவள் மீது கோபித்த நிலையில் இரவைக் கழித்தால், அதிகாலை வரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(8 votes)
ஒருவர் தனது மனைவியை மூன்று தடவைகள் தலாக் கூறிவிட்டால்; அவளுடன் சேர்ந்து வாழ முடியாது. அவ்வாறு அவளை மீண்டும் திருமணம் முடிக்க விரும்பினால், அப்பெண் தலாக்கின் இத்தாவை பூர்த்தி செய்ததன் பின் வேறொருவரை உரிய முறையில் திருமணம் செய்து....
இதை மதிப்பிடுங்கள்
(5 votes)
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
இதை மதிப்பிடுங்கள்
(5 votes)