பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(5 votes)
பொறுப்புடையவர் என்பவர் நம்பிக்கைக்குரிய, பாதுகாக்கக்கூடிய, தான் பொறுப்பெடுத்த விடயத்தின் நலவுக்;காக செயற்படக்கூடியவராவார். தன்னுடைய கண்காணிப்புக்குக் கீழ் எது இருந்தாலும் அதிலே நீதமாகவும், இம்மை மறுமைக்கான நலவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் வேண்டப்படுவார்.”
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
நீங்கள் குறிப்பிட்டுள்ள மஸ்ஜித் பல வருடங்களாக தொழுகை நடாத்தப்பட்ட இடமாகும். அதில் தற்பொழுது தொழுகை நடாத்தப்படாவிட்டாலும், மஸ்ஜிதுக்குரிய அனைத்து சட்டங்களையும் அதற்குக் கொடுப்பது கட்டாயமாகும். புதிய மஸ்ஜிதைக் கட்டியதனால் பழைய மஸ்ஜிதை வணக்க வழிபாடுகளைக் கொண்டு செழிப்பாக்காமலும் அதன் கண்ணியத்தைப் பேணாமலும் இருப்பது தவறாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
இஸ்லாத்தின் பார்வiயில், சீட்டுக் குலுக்கல் முறை கடன் உடன்படிக்கையாகும். இக்கடன்; உடன்படிக்கையில், ஒரு புறம் தவணை முறையில் சிறு தொகையாக அறவிடப்பட்டு, மறு புறம் முழுத் தொகையையும் தவணை முறையில் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் திரும்பக் கையளிக்கப்படுகிறது.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
வக்ப் செய்யப்பட்ட பொருட்களை விற்பது கூடாது என்றிருந்தாலும், அப்பொருட்கள் பாவனைக்கு அருகதையற்றதாகி அவற்றினால் பயன்பெற முடியாத நிலையை அடைந்தால், அவற்றை விற்றுப் பணமாக்கலாம் என்ற கருத்தை பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த முக்கிய அறிஞர்களில் ஒருவரான இமாம் அந்நவவி றஹிமஹுமுல்லாஹு அவர்கள் தனது 'மின்ஹாஜுத் தாலிபீன்;' என்ற நூலில் மேற்படி விடயம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்: 'பள்ளிக்கு வக்ப் செய்யப்பட்ட பாய்கள் உக்கிப்போய், மரக்குற்றிகள் உடைந்துபோய் எரித்து பயன்பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தால் அவற்றை விற்கலாம் என்பதே (ஷாபிஈ மத்ஹபின்) வலுவான கருத்தாகும்.' (பாகம் : 282, பக்கம்: 06)
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
குறிப்பிட்ட நிதியத்தின் மூலம் எப்பொருளை வாங்கப் போகின்றீர்கள் அல்லது தாபிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்யப்போகின்றீர்கள், அதை யார் மூலம் நிர்வகிக்கப்போகின்றீர்கள், அவர்கள் மரணித்ததன் பின் அதை நிர்வகிப்பவர்கள் யார் என்பனவற்றையும், நிதியத்துக்கு பணம் அல்லது பொருள் வழங்குபவர்களிடம் தெளிவாகக் கூறி அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இது ஒரு பொறுப்பு வாய்ந்த அமானிதம் என்பதால், இவ்வமானிதத்தை முறையாகப் பாதுகாத்து அதன் நிபந்தனைகளைப் பேணி கருமம் ஆற்றுவதற்கு உங்களுக்குப் போதிய தகைமை இருந்தால் தான் இத்திட்டத்தைச் செய்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.
இதை மதிப்பிடுங்கள்
(18 votes)
அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் கண்ணியமான இடமாகும். அது முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக, கலாசார, ஆன்மீக, மற்றும் கல்விசார் செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு உதவுதல் போன்ற விடயங்கள் நடைபெறும் இடமாகும். எனவே, அதன் புனிதத்துவத்தைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் அறிவர்.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
குறித்த காணி குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்டிருந்தால் வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அந்நோக்கத்திற்காகவே அக்காணியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)