பிரிவு

இறை நம்பிக்கை (1 FATWAS)

பொதுவானவைகள் (29 FATWAS)

குழந்தை வளர்ப்பு (3 FATWAS)

ஹலால் மற்றும் ஹராம் (11 FATWAS)

வக்ப் மற்றும் மஸ்ஜித் (28 FATWAS)

நேர்ச்சை மற்றும் சத்தியம் (0 FATWAS)

பெண்கள் (6 FATWAS)

குற்றங்கள் மற்றும் தண்டனைகள் (0 FATWAS)

வாரிசு உரிமை (3 FATWAS)

திருமணம் (15 FATWAS)

வணிகம் மற்றும் வட்டி (17 FATWAS)

விவாகரத்து (6 FATWAS)

அகீகா மற்றும் குழந்தையின் சட்டங்கள் (0 FATWAS)

ஹஜ் மற்றும் உம்ரா (5 FATWAS)

ஸக்காத் - ஸதகா (33 FATWAS)

உழ்ஹிய்யா (6 FATWAS)

நோன்பு (8 FATWAS)

பெருநாட்கள் (1 FATWAS)

ஜனாஸா மற்றும் மையவாடி (17 FATWAS)

தொழுகை (29 FATWAS)

சக வாழ்வும் சமூக தொடர்பும் (1 FATWAS)

தூய்மை (தஹாரா) (0 FATWAS)

விலையுயர்ந்த வெளிநாட்டுப் பூனை வகையொன்றை (Persian Cat) வியாபார நோக்கத்தில் வளர்த்து, விற்பனை செய்வது சம்பந்தமான ஷரீஆவின் நிலைப்பாடு

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படக்கூடிய பூனைகளை விற்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு. எனினும், விலையுயர்ந்த பூனைகளை வாங்குதல், விற்றல் மற்றும் அவற்றை வளர்த்தல் போன்றவகைளில் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட வீண்விரயங்கள், ஆடம்பரங்கள் எற்படுதல் மற்றும் அவற்றிற்காக செலவுகள் செய்யும் போது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ள ஏனைய முக்கிய கடமைகள், பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருத்தல் போன்றவைகள் ஏற்படுமாயின் இது தடுக்கப்பட்டதாக ஆகிவிடும்.

“சுபர் முஸ்லிம் சிந்தனை” தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா

பொதுவாக அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மறுமைநாளின் அடையாளங்களில், சில அடையாளங்கள் மிகத்தெளிவாகவும் மற்றும் சில அடையாளங்கள் சுருக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. அவை எவ்வாறு கூறப்பட்டுள்ளனவோ அவற்றை அவ்வாறே நம்பி, ஏற்றுக் கொள்வது போதுமானதாகும். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த சஹாபாக்கள், அவர்களைத் துயர்ந்தவர்கள் மற்றும் இமாம்கள் போன்றோர் அவற்றை அவ்வாறே நம்பி செயலாற்றியுள்ளதுடன், மற்றவர்களுக்கு போதனை செய்தும் வந்துள்ளனர். 1400 வருடங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அடிப்படையை வெறுமனே பகுத்தறிவுக்கு உட்படுத்தி இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு அப்பால் ஒரு தனிநபரின் சிந்தனைக்கு தோன்றிய விடயங்களை மார்க்கமாக ஆக்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துவது பெரும்பாவமாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளை நோக்கும் போது, ஷைக் இம்ரான் ஹூஸைன் (திரினிடாட்) என்பவரது சிந்தனைப் போக்கைத் தழுவியவர்களது வினாக்களாகவே தென்படுகின்றன. இவரது கருத்துக்களை நோக்கும் போது அவை, பல தெளிவான குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக உள்ளதையும் காணலாம்.

யஃஜுஜ் மஃஜுஜ் தொடர்பான மார்க்க விளக்கம்

யஃஜூஜ், மஃஜூஜ் என்பவர்கள் யாவர்? அவர்கள் வெளியாகிவிட்டனரா? உலக அழிவு நெருங்கிவிட்டதா? என்பன தொடர்பான கேள்விகள், பலர் மூலம் தொடராக வினப்படுகின்றன. இவற்றைப்பற்றி அல் குர்ஆன் அஸ் ஸூன்னாவின் ஒளியில் தெளிவு பெறுவது பொருத்தமானதாகும். யஃஜூஜ், மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவது மறுமையின் இறுதியாக நிகழும் பெரிய அடையாளங்களில் ஓர் அடையாளமாகும் என்பது அல்குர்ஆனில் சுருக்கமாகவும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் தமது பகுத்தறிவு வாதங்களை முன்வைத்து, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்ற தவறான ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து, சமூகத்தில் வீணான குழப்பங்களை உண்டுபண்ணுகின்றனர். இவர்களின் இந்தப் போங்கு ஆதாரபூர்வமான பல நபிமொழிகளை மறுக்கும் நிலையை ஏற்படுத்தி, சமூகத்தை ஒரு பேராபத்தின் பக்கம் இட்டுச்செல்ல வழிவகுக்கும். யஃஜூஜ், மஃஜூஜ்; கூட்டத்தினர் மனிதர்களில் உள்ள ஒரு பிரிவினராவர். நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவரான யாபிஸ் என்பவரது சந்ததியினராவர். அவர்கள் உலகில் பெரும் குழப்பங்களில் ஈடுபட்டதன் காரணமாக துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம், அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெளிவர முடியாமல் பெரும் சுவர் கட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் மரணித்தவர்களின் உடல்களை பூமியில் அடக்கம் செய்வது தொடர்பான மார்க்க விளக்கம்

4013
மரணித்த ஒருவரின் உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதையே அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய மூலாதாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. அடக்கம் செய்வது பற்றிய அல் குர்ஆனின் வசனங்கள் : 1. مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ( سورة طه : 55) இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம். (தாஹா : 55). இவ்வசனத்தில் “நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹூ தஆலா குறிப்பிடுகின்றான். அடக்கம் செய்வது பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் : 6. (عن أبي سعيدٍ الخُدْريِّ رضِيَ اللهُ عنه، أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قال: اذهبوا، فادْفِنوا صاحِبَكم. (صحيح مسلم : 2236) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், நீங்கள் சென்று உங்களது தோழரை நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2236) 7. (عن جابرٍ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال: ادفِنوا القَتْلى في مصارِعِهم. (سنن أبي داود : 8557) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் என்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களைக் குறித்து தம்தோழர்களிடம், அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இடங்களிலேயே அவர்களை நல்லடக்கம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். (ஸூனன் அபீ தாவூத் : 8557)

2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் கருத்துக்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் அவற்றினால் கவரப்பட்டோரின் நிலை குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா

புனித அல்-குர்ஆன் எந்த சூழ்நிலையிலும் ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது. மேற்கண்ட அல் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள், அல்லாஸூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்களை கருணை காட்டுபவராக இவ்வையகத்துக்கு அனுப்பியுள்ளான் என்பதையும், இஸ்லாம் தீவிரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பதையும், எந்நிலையிலும் நடுநிலையாகவும், நிதானமாகவும், மிதமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிறருக்கு அநியாயம் இழைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன. தற்கொலையை பெரும்பாவமென கூறி முற்றிலும் அதை தடைசெய்துள்ள இஸ்லாம், அந்தப் பாவச் செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை மறுமையில் உண்டு எனவும் எச்சரித்துள்ளது. இவ்விடயம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் நாட்டின் சட்டத்தை பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்பதுடன், தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்துவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தற்காலத்தில் “மூளைச் சலவை செய்யப்பட்ட” முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான தீவிரவாத சிந்தனையுடன் உலகளவில் செயல்பட்டுவருவதை பார்க்க முடிகிறது. அதனால், உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் ஏற்படுத்தப்படுகின்றது. 2015.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இவ்வாறான தீவிரவாத சிந்தனைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற பிரகடனத்தை வெளியிட்டது. இதே அடிப்படையிலேயே சர்வதேச பத்வா அமைப்புக்களின் பத்வாக்களும் அமைந்திருக்கின்றன. ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்களால் உயிர்த்த ஞாயிறு 2019.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டித்தோம். இம்மிலேச்சத்தனமான தாக்குதலால், அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டு இன்னும் பலர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டதோடு, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இந்த தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள், இஸ்லாத்திற்கு முரணானது என்ற காரணத்தினால் தான், அந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டோரின் உயிர்களை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க வேண்டாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வெளியிட்டது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமும், அவனது சகாக்களும் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பிழையாக வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்த அல்குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு அனுமதியும் கிடையாது. இது தொடர்பான பூரணமான விளக்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நெறி தவறிய தீவிரவாத சிந்தனைகளிலிருந்து முழு சமூகத்தையும் தேசத்தையும் பாதுகாத்துக் கொள்ள இவ்விடயத்தில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

Covid-19 தாக்கத்தினால் மரணித்த முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்வது தொடர்பான மார்க்கத் தெளிவு

மரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர். அதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.