இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி பற்றி

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சம்பந்தமான இஸ்லாமிய விளக்கங்களையும் தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது. வளர்ந்து வரும் நவீன பொருளாதார முறையினைக் கவனத்திற் கொண்டு அவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் ஆலிம்களைத் தயாரிக்கும் உயர் நோக்கில் பல்வேறு வதிவிடப் பயிற்சிகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது.

இஸ்லாமிய நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு போன்றே ஸகாத், சதகா, வராஸத் (அனந்தரச் சொத்து) வஸிய்யா போன்ற விடயங்களில் இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவது இக்குழுவின் முக்கிய பணியாகும். 

பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள முஸ்லிம்களது தகவல்களை மஸ்ஜித் வாரியாக சேகரித்து, தகுதியுடையோருக்கு நிவாரணங்களை வழங்கவும் வாழ்வாதார மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கவும் இக்குழு செயற்பட்டு வருகின்றது. அத்துடன், குடும்ப நிலை உட்பட பல்வேறுபட்ட நெருக்கடிகளின் காரணமாக கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கான உதவிகளும் திறமையுடையோருக்கான தொழில் நுட்பப் பயிற்சிகளும் வழங்க இக்குழு செயற்பட்டு வருகின்றது. இது போன்ற தேவைகளுக்காக மஸ்ஜித்களை மையப்படுத்தி ஸகாத்தை சேகரிக்கும் விடயத்திலும் பைதுல் மாலை உருவாக்கும் விடயத்திலும்  இக்குழு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.

மேலும் வஸிய்யா, வராஸத், வக்ப் போன்ற விடயங்கள் தொடர்பான சட்டப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கி வருவது இக்குழுவின் மற்றுமொரு பணியாகும்.