கொவிட்-19 அசாதாரண சூழ்நிழையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் வழிகாட்டல்கள்
1. நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோவிட்-19 உடைய பரவலை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.
2. மஸ்ஜித்களின் விடயங்களில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.
3. இச்சோதனைகள் நீங்குவதற்காக துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களின் பக்கம் திரும்புவதோடு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
4. ஆலிம்கள் இது தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புனர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.