11.10.2016 (09.01.1438)
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!
இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.
அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்லாம்.
தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :
(اللَّهُمَّ اسْقِنا غيثًا مغيثًا مريئًا مريعًا نافعاً غَيْرَ ضارٍ، عاجِلاً غَيْرَ آجِلٍ" - رواه أبو داود ((1169"
(اللهم أغثنا ، اللهم أغثنا ، اللهم أغثنا - " رواه مسلم (897"
(اللهم اسق عبادك ، وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت - "رواه أبو داود (1176"
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
12.09.2016 (10.12.1437)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து!
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
மகிழ்ச்சிப் பிரவாகத்தால் உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் தக்பீர் முழங்கும் தியாகத்திருநாள் இன்றாகும். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் கூறுவதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகங்கள் உலகம் உள்ளவரை நினைவுபடுத்தப்படும். இவை மனித சமூகத்துக்கு சிறந்த முன்மாதிரிகளாகும். அதனையே நாமும் இத்தினத்தில் நினைவு படுத்துகின்றோம்.
இத்தியாகத்திருநாளில் எமது விசுவாசத்துக்கு உரமூட்டிக்கொள்ளவும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தியாக உணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது" - (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடும் ஒற்றுமையுடனும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக!
மேலும் எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக!
தகப்பலல்லாஹு மின்னாவமின்கும்! ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஹலால் சான்றிதழ் தொடர்பான ஊடக அறிக்கை
07.01.2016 (26.03.1437)
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட நுகர்வோர் பெருமக்களுக்கு ஒரு முக்கிய விடயம் பற்றிய தெளிவுரையை வழங்கும் நோக்கில் இவ்வூடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.
அண்மைக் காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷெய்க் முப்தி M.I.M றிஸ்வி அவர்களின் பெயரில் (SMS) குறுஞ்செய்திகள், Whatsapp மற்றும் சமூக வலைத்தளங்களில் சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில், சில நிறுவனங்களின் உற்பத்திகள் சிலவற்றை ஹலால் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்க மறுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவையனைத்தும் பொய்யான செய்திகள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றௌம்.
இது போன்ற பொய்யான தகவல்கள் பொருட்களின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் என நாம் உறுதியாக நம்புகின்றௌம். எனவே, சில தீய சக்திகளால் முன்வைக்கப்படும் இவ்வாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றௌம்.
அத்துடன் 2013.12.31 முதல் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாட்டில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முற்றாக நீங்கியுள்ளது என்பதையும், தற்சமயம் நுகர்வோர் பொருட்களுக்காக ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாடு Halal Accreditation Council (Guaranteed) Limited என்ற நிறுவனம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் அறியத் தருகின்றௌம்.
மேலும் ஹலால் தொடர்பான சந்தேகங்களுக்கு 0117425225 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றௌம்.
அஷ்-ஷைக் பாழில் பாரூக்
செயலாளர் – ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
31.08.2016 / 27.11.1437
திஹாரி பதற்ற நிலைமையைச் தணிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முயற்சி.
திஹாரி பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அபூபக்ர் மஸ்ஜிதில் குத்பா ஆரம்பிக்கப்பட்டமை சம்பந்தமாக, திஹாரி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தாருக்கும் அபூபக்ர் மஸ்ஜிதைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் 2016.08.26 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஏற்பட்ட கவலைக்கிடமான நிகழ்வை அடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் கொண்ட விஷேட குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரிக் கிளை உறுப்பினர்கள், திஹாரி பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அபூபக்ர் மஸ்ஜித், ஜாமிஉத் தவ்ஹீத் மஸ்ஜித் நிருவாகத்தினர் ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்து விரிவாகவும் சுமுகமாகவும் கலந்துரையாடல்களை நடத்தியது.
நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்து ஊரின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக சில இணக்கப்பாட்டுக்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. மேற்படி சம்பந்தப்பட்டவர்களைத் தலைமையகத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மாணிக்கபட்டுள்ளது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
10.12.1436 / 24.09.2015
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
மகிழ்ச்சிப் பிரவாகத்தால் உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் தக்பீர் முழங்கும் தியாகத்திருநாள் இன்றாகும். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் கூறியமைக்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த இன்னல்கள் எத்தனையெத்தனை? தான் கொண்ட நம்பிக்கையின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகங்கள் எத்தனையெத்தனை? உலகம் உள்ளவரை நினைவுபடுத்தப்படும் இவை மனித சமூகத்துக்கு முன்மாதிரிகளாகும். அதனையே நாமும் நினைவு படுத்துகின்றௌம்.
இத்தியாகத்திருநாளில் எமது விசுவாசத்துக்கு உரமூட்டிக்கொள்ளவும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தியாக உணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
மேலும் இத்தருணத்தில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. ஒற்றுமையெனும் கயிற்றைப் பிடித்து தீன்பணியில் ஈடுபடுவோமாக.
“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது" - (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக! மேலும் எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக!
தகப்பலல்லாஹு மின்னாவமின்கும்! ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
20.10.2015 (06.01.1437)
மீள் குடியேற்றம் தொடர்பான இரண்டாம் கட்ட செயற்திட்டக் கலந்துரையாடல்!
நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜம்இய்யாவின் கௌரவ தலைவார் தலைமை தாங்கினார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்திலும் அகதி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தை பூரணப்படுத்தி நல்லதொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றை ஜம்இய்யா குறித்த அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 24,898 முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டு புத்தளம், குருணாகல், நீர்கொழும்பு, பாணந்துரை மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று குடியமர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் மீள் குடியேறிய போதிலும் போதிய அடிப்படை வசதிகளின்றி மிகச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறனர். மீள் குடியேறிய மற்றும் சிலர் அதே காரணங்களுக்காக மீண்டும் திரும்பி விட்டனர்.
இந்நிலையில் முதற் கட்டமாக மீள் குடியேறிய மக்களுக்கான முழுமையான வசதிகளை செய்து கொடுக்குமாறு வேண்டி நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மீள் குடியேற்ற அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தி ஜம்இய்யா நாட்டின் ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து ஒரு செயற்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றது.
குறித்த கலந்துரையாடலில், முன்வைக்கப்படவிருக்கின்ற செயற்திட்ட அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் இத்திட்டம் வெற்றிகரமாக அமைய எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மிக விரிவாக ஆராயப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் வழங்கினர்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
03.11.2015 / 20.01.1437
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
நாட்டின் கால நிலை சீரடைய பிரார்த்திப்போம்
தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் ஜம்இய்யாவின் பிராந்திய கிளைகள், பள்ளிநிர்வாகிகள் சம்மேளனங்கள், நலன் விரும்பிகள் அனைவரும் தம்மாலான இயன்ற உதவி, ஒத்தாசைகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக்குழு அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.
பாதிப்படைந்தவர்கள் இயல்பு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், தேவையை விட மழை அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.
اللهُمَّ حَوالينَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ – صحيح مسلم
அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அல்-பாஸி
செயலாளர் – சமூக சேவைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.11.2015 (21.01.1437)
மூத்த ஆலிம்களின் விபரங்களை திரட்டுதல்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
63 வயதைத் தாண்டிய ஆலிம்களின் விபரங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திரட்டிக் கொண்டிருக்கின்றது. பல ஆலிம்களின் விபரங்கள் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளிலிருந்து எமக்கு வந்து சேர்ந்துள்ளன.
எனவே இதுவரை 63 வயதைத் தாண்டிய ஆலிம்களில் எவர்களுடைய விபரங்கள் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அனுப்பப்படவில்லையோ அவர்கள் அவசரமாக தமது பிரதேசக் கிளைகளைத் தொடர்பு கொண்டு எதிர்வரும் 25.11.2015ம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கச் செய்யூமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றௌம்.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ளவும்.
அஷ்ஷைக் என்.எம். சிராஜ் 0117-490490 / 0773-671159
அஷ்ஷைக் கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
செயலாளர்- ஆலிம்கள் விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
18.03.2016 (08.06.1437)
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்
இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக பயிர்பச்சைகள் நாசமாகியும் தேவையான தண்ணீர் இல்லாமலும் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.
அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். எமது பாவகாங்கள் காரணமாக அல்லாஹ்வின் தண்டனை மற்றும் கோபப்பார்வை ஏற்படலாம்.
தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஒதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருள்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையூம் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மழை தேடி ஓதிய சில துஆக்கள்:
" اللَّهُمَّ اسْقِنا غيثًا مغيثًا مريئًا مريعًا نافعاً غَيْرَ ضارٌ، عاجِلاً غَيْرَ آجِلٍ" - رواه أبو داود (1169)
" اللهم أغثنا ، اللهم أغثنا ، اللهم أغثنا - " رواه مسلم (897)
" اللهم اسق عبادك ، وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت - "رواه أبو داود (1176)
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளார்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான தொகுப்பு
அனர்த்தங்களின் போது அல்லாஹ்வின் பக்கம் மீளுவோம்;!
01.நல்லவர்களுக்கு இது ஒரு சோதனை.
02.பாவிகளுக்கு இது ஒரு தண்டனை.
03.பாதிக்கப்படாதவர்களுக்கு இது ஒரு படிப்பினை.
وَتُوبُوا إِلَى اللَّـهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ - النور: ٣١
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ - هود: ٣
أَن لَّا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ, فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ - الأنبياء : ٨٧/ ٨٨
நபியவர்களும் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவார்கள்.
அல்லாஹ்வுக்காக செலவழிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள் என அல்லாஹ் கேட்கின்றான்.
(குறிப்பு: நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பே அவர்களிடம் சோதனைகளில் சிக்குண்டவர்களுக்கு உதவும் பண்பு இருந்துள்ளது.)
صحيح البخاري > كِتَاب : الْحَوَالَاتِ > بَاب : جِوَارِ أَبِي بَكْرٍ فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَعَقْدِهِ
இது போன்ற பண்புகள் ஸஹாபாக்களிடம் பரவலாக காணப்பட்டன. அவர்கள் கஷ்டமான நிலைமைகளிலும் கூட மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருந்தார்கள். அபு அகீல் அவர்கள் தான் சம்பாதித்ததை தர்மம் செய்த சம்பவம்.
இறுதியாக தௌபா> இஸ்திஃபார், துஆக்களின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் ஸதகாக்கள் மூலமாகவும் அல்லாஹ்வினுடைய கோபப்பார்வையில் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா