31.08.2016 / 27.11.1437
திஹாரி பதற்ற நிலைமையைச் தணிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முயற்சி.
திஹாரி பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அபூபக்ர் மஸ்ஜிதில் குத்பா ஆரம்பிக்கப்பட்டமை சம்பந்தமாக, திஹாரி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தாருக்கும் அபூபக்ர் மஸ்ஜிதைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் 2016.08.26 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஏற்பட்ட கவலைக்கிடமான நிகழ்வை அடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் கொண்ட விஷேட குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரிக் கிளை உறுப்பினர்கள், திஹாரி பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அபூபக்ர் மஸ்ஜித், ஜாமிஉத் தவ்ஹீத் மஸ்ஜித் நிருவாகத்தினர் ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்து விரிவாகவும் சுமுகமாகவும் கலந்துரையாடல்களை நடத்தியது.
நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்து ஊரின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக சில இணக்கப்பாட்டுக்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. மேற்படி சம்பந்தப்பட்டவர்களைத் தலைமையகத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மாணிக்கபட்டுள்ளது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா