ACJU/FTW/2020
07.05.2020
13.09.1441
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
கேள்வி : COVID 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா?
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
உணவு அல்லது பானமாக உட்கொள்ளக்கூடிய ஏதும் வயிற்றிற்குள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்துவிடும் எனும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்தொற்றுமை உள்ளது. இதற்கு அல்-குர்ஆனில் அல்-பகரஹ் - 187 ஆம் வசனம் மற்றும் பல ஹதீஸ்கள் ஆதாரங்களாக உள்ளன. (1)
அவ்வாறே, உணவு அல்லது பானமாக உட்கொள்ளப்படாத கற்கள், இரும்பு போன்றவை வயிற்றிற்குள் சென்று விட்டாலும் நோன்பு முறிந்து விடும் என்று நான்கு மத்ஹபுகள் உற்பட பெரும்பான்மை மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். (2)
இதற்கு இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக உள்ளது.
“உடம்பிற்குள் (துவாரங்களினால்) ஏதாவது ஒரு பொருள் நுழைவதினாலே நோன்பு முறியும்” (ஸஹீஹுல் புகாரி) (3)
ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள், ஒரு நோன்பாளி தான் நோன்பாளி என்ற ஞாபகத்துடன் வேண்டுமென்று சுய விருப்பத்துடன் வாயில் ஏதேனுமொரு பொருளை உட்செலுத்தி
அப்பொருள் தொண்டையின் மத்திய பகுதியைத் தாண்டி விடுமானால் அவரது நோன்பு முறிந்து விடும் என்றும், அவ்வாறே ஒரு நோன்பாளி மூக்கில் ஏதேனுமொரு பொருளை உட்செலுத்தி அப்பொருள் (கைஷூம் எனப்படும்) மூக்குத் துளையின் உட்பகுதியைத் தாண்டிச் சென்றால் அவரது நோன்பு முறிந்து விடும் என்றும் கூறுகின்றனர். இதுவே, ஹன்பலி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தாகும். (4)
ஹனபி மத்ஹபின் அறிஞர்கள், உட்செலுத்தப்படும் ஏதேனுமொரு பொருள் பூர்த்தியாக உடலினுள்ளே சென்று மறைந்தால் மாத்திரமே நோன்பு முறியும் என்றும், அதில் சில பகுதிகள் வெளியில் தெரிந்துகொண்டிருந்தால் அல்லது உட்சென்றுவிட்டு வெளியில் திரும்பி வந்துவிட்டால் நோன்பு முறியாது என்றும் கூறுகின்றனர். மாலிகி மத்ஹபின் அறிஞர்கள், திண்மமான ஏதேனும் பொருட்கள் தொண்டையை அடைந்தால் நோன்பு முறியாது, அவை வயிற்றை அடைந்தாலே நோன்பு முறியும் என்று கூறுகின்றனர். (5)
எனவே, ஹனபி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப் பிரகாரம் வாய் அல்லது மூக்கினால் அனுப்பப்படும் கருவி வெளியில் வந்துவிடுவதால் COVID 19 பரிசோதனையினால் நோன்பு முறியாது. மாலிகி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப் பிரகாரமும் வயிற்றிற்குள் ஏதும் செல்லவில்லை என்பதால் நோன்பு முறியாது.
இவ்வடிப்படையில், ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தின் பிரகாரம் COVID 19 பரிசோதனையில் மூக்கிலும் வாயிலும் செலுத்தப்படும் கருவி மேற்குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை என இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் உறுதிபடக் கூறுவதால் இவ்வாறு பரிசோதனை செய்வதால் நோன்பு முறியாது. (6)
எனினும், ஏதேனுமொரு விதத்தில் மேற்கூறப்பட்ட எல்லையை குறித்த கருவி தாண்டியது உறுதியாகத் தெரிந்தால் நோன்பு முறிந்து விடும். அதனைப் பிரிதொரு தினத்தில் கழா செய்து கொள்ள வேண்டும். (7)
இப்பரிசோதனை விடயத்தில் முஸ்லிம்கள் உரிய அதிகாரிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி
மேற்பார்வையாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
( 1) وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى الْفِطْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ بِمَا يُتَغَذَّى بِهِ، فَأَمَّا مَا لَا يَتَغَذَّى بِهِ، فَعَامَّةُ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ الْفِطْرَ يَحْصُلُ بِهِ. (المغنى لابن قدامة)
(2) وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى الْفِطْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ بِمَا يُتَغَذَّى بِهِ، فَأَمَّا مَا لَا يَتَغَذَّى بِهِ، فَعَامَّةُ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ الْفِطْرَ يَحْصُلُ بِهِ. (المغنى لابن قدامة)
(3) وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَعِكْرِمَةُ: «الصَّوْمُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ» (صحيح البخاري كتاب الصوم - بَابُ الحِجَامَةِ وَالقَيْءِ لِلصَّائِمِ)
(4) ﻭﺃﻣﺎ) اﻟﺴﻌﻮﻁ ﻓﺈﻥ ﻭﺻﻞ ﺇﻟﻰ اﻟﺪﻣﺎﻍ ﺃﻓﻄﺮ ﺑﻼ ﺧﻼﻑ ﻗﺎﻝ ﺃﺻﺤﺎﺑﻨﺎ: ﻭﻣﺎ ﺟﺎﻭﺯ اﻟﺨﻴﺸﻮﻡ ﻓﻲ اﻻﺳﺘﻌﺎﻁ ﻓﻘﺪ ﺣﺼﻞ ﻓﻲ ﺣﺪ اﻟﺒﺎﻃﻦ ﻭﺣﺼﻞ ﺑﻪ اﻟﻔﻄﺮ ﻗﺎﻝ ﺃﺻﺤﺎﺑﻨﺎ ﻭﺩاﺧﻞ اﻟﻔﻢ ﻭاﻷﻧﻒ ﺇﻟﻰ ﻣﻨﺘﻬﻰ اﻟﻐﻠﺼﻤﺔ ﻭاﻟﺨﻴﺸﻮﻡ ﻟﻪ ﺣﻜﻢ اﻟﻈﺎﻫﺮ ﻓﻲ ﺑﻌﺾ اﻷﺷﻴﺎء ﺣﺘﻰ ﻟﻮ ﺃﺧﺮﺝ ﺇﻟﻴﻪ اﻟﻘﺊ ﺃﻭ اﺑﺘﻠﻊ ﻣﻨﻪ ﻧﺨﺎﻣﺔ ﺃﻓﻄﺮ (المجموع شرح المهذب)
ﺛﻢ ﺩاﺧﻞ اﻟﻔﻢ ﻭاﻷﻧﻒ ﺇﻟﻰ ﻣﻨﺘﻬﻰ اﻟﻐﻠﺼﻤﺔ ﻭاﻟﺨﻴﺸﻮﻡ ﻟﻪ ﺣﻜﻢ اﻟﻈﺎﻫﺮ ﻓﻲ اﻹﻓﻄﺎﺭ ﺑﺎﺳﺘﺨﺮاﺝ اﻟﻘﻲء ﺇﻟﻴﻪ ﻭاﺑﺘﻼﻉ اﻟﻨﺨﺎﻣﺔ ﻣﻨﻪ ﻭﻋﺪﻣﻪ ﺑﺪﺧﻮﻝ ﺷﻲء ﻓﻴﻪ ﻗﺎﻝ ﻓﻲ اﻟﻤﺼﺒﺎﺡ ﻭاﻟﻐﻠﺼﻤﺔ ﺃﻱ: ﺑﻤﻌﺠﻤﺔ ﻣﻔﺘﻮﺣﺔ ﻓﻼﻡ ﺳﺎﻛﻨﺔ ﻓﻤﻬﻤﻠﺔ ﺭﺃﺱ اﻟﺤﻠﻘﻮﻡ، ﻭﻫﻮ اﻟﻤﻮﺿﻊ اﻟﻨﺎﺗﺊ ﻓﻲ اﻟﺤﻠﻖ ﻭاﻟﺠﻤﻊ ﻏﻼﺻﻢ ﻭﻗﻮﻟﻪ ﻣ ﺭ ﺛﻢ ﺩاﺧﻞ اﻟﻔﻢ ﺃﻱ: ﺇﻟﻰ ﻣﺎ ﻭﺭاء ﻣﺨﺮﺝ اﻟﺤﺎء اﻟﻤﻬﻤﻠﺔ ﻭﺩاﺧﻞ اﻷﻧﻒ ﺇﻟﻰ ﻣﺎ ﻭﺭاء اﻟﺨﻴﺎﺷﻴﻢ اﻩـ ﻭﻗﺎﻝ اﻟﻜﺮﺩﻱ: ﻋﻠﻰ ﺑﺎﻓﻀﻞ ﻓﺎﻟﺨﻴﺸﻮﻡ ﺟﻤﻴﻌﻪ ﻣﻦ اﻟﻈﺎﻫﺮ ﻗﺎﻝ ﻓﻲ اﻟﻌﺒﺎﺏ ﻭاﻟﻘﺼﺒﺔ ﻣﻦ اﻟﺨﻴﺸﻮﻡ اﻩـ ﻭﻫﻲ ﻓﻮﻕ اﻟﻤﺎﺭﻥ ﻭﻫﻮ ﻣﺎ ﻻﻥ ﻣﻦ اﻷﻧﻒ ( حاشية الشرواني)
(قوله: ولا يفطر بوصول إلى باطن قصبة أنف) أي لأنها من الظاهر، وذلك لأن القصبة من الخيشوم، والخيشوم جميعه من الظاهر. (قوله حتى يجاوز منتهى الخيشوم) أي فإن جاوزه أفطر ومتى لم يجاوز لا يفطر. (وقوله: وهو) أي المنتهى (إعانة الطالبين )
(5) وَكَذَا لَوْ ابْتَلَعَ خَشَبَةً) أَيْ عُودًا مِنْ خَشَبٍ إنْ غَابَ فِي حَلْقِهِ أَفْطَرَ وَإِلَّا فَلَا (قَوْلُهُ: مُفَادُهُ) أَيْ مُفَادُ مَا ذُكِرَ مَتْنًا وَشَرْحًا وَهُوَ أَنَّ مَا دَخَلَ فِي الْجَوْفِ إنْ غَابَ فِيهِ فَسَدَ وَهُوَ الْمُرَادُ بِالِاسْتِقْرَارِ وَإِنْ لَمْ يَغِبْ بَلْ بَقِيَ طَرَفٌ مِنْهُ فِي الْخَارِجِ أَوْ كَانَ مُتَّصِلًا بِشَيْءٍ خَارِجٍ لَا يَفْسُدُ لِعَدَمِ اسْتِقْرَارِهِ. (رد المحتار على الدر المختار)
(6) وَاحْتُرِزَ بِالْمَائِعِ عَنْ غَيْرِهِ كَحَصَاةٍ وَدِرْهَمٍ فَوُصُولُهُ لِلْحَلْقِ لَا يُفْسِدُ بَلْ لِلْمَعِدَةِ. (حاشية الصاوي على الشرح الصغير)
(7) وفى نهاية المحتاج فى مسألة مضغ العلك للصائم: فَإِنْ تَيَقَّنَ وُصُولَ بَعْضِ جُرْمِهِ عَمْدًا إلَى جَوْفِهِ أَفْطَرَ وَحِينَئِذٍ يَحْرُمُ مَضْغُهُ، بِخِلَافِ مَا إذَا شَكَّ أَوْ وَصَلَ طَعْمُهُ أَوْ رِيحُهُ لِأَنَّهُ مُجَاوِرٌ، وَكَالْعِلْكِ فِي ذَلِكَ اللِّبَانُ الْأَبْيَضُ فَإِنْ كَانَ لَوْ أَصَابَهُ الْمَاءُ يَبِسَ وَاشْتَدَّ كُرِهَ مَضْغُهُ وَإِلَّا حَرُمَ.
ACJU/MED/2020/001
05.05.2020
ஊரடங்கு தளர்த்தப்படல் மற்றும் ரமழானின் எஞ்சிய பகுதி தொடர்பான சில முக்கிய வழிகாட்டல்கள்
கொவிட் 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருந்துவரும் இந்நிலையில் மக்களின் அத்தியவசிய தேவைகளுக்காகவே நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு குறித்ததொரு பொறிமுறையினூடாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மிகவும் அவதானமாகவும், பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது அவசியமாகும். இதன்போது அரசினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி நடக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களையும் பேணி நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாம் அவதானத்துடன், உரிய வழிகாட்டல்களைப் பேணி நடப்பதானது எம்மையும், சமூகத்தையும் வீண் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும். ஏனவேஇ மேற்கூறிய வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும் பேணி நடக்குமாறும் இத்தகைய வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை பொருத்தமான ஒரு நேரத்தில் அதானுக்குப் பிறகு மஸ்ஜித் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு சகல மஸ்ஜித் நிர்வாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்ளும் அதேநேரம் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சகலரும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
ACJU/NGS/2020/008
2020.04.20 (1441.08.26)
கடந்த வருடம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல் தின நிகழ்வுகளுக்கான வழிகாட்டல்கள்
கடந்த வருடம் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சதனமான தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடமாகின்ற இச்சந்தர்ப்பத்தில் அத்தினத்தை சகலரும் கவலையுடன் நினைவு கூறும் முகமாக அனைத்து மதஸ்தலங்களிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வக்ப் சபையும் முஸ்லிம் சமயப் பண்பாட்டளுவல்கள் திணைக்களமும், மஸ்ஜித்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டி இருப்பதை யாவரும் அறிவோம். அதற்கிணங்க அந்நிகழ்வுகளை பின்வருமாறு அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டுகின்றது.
8:40 - 8:45 வரை கிராஅத். (இதில் சூரா மாஇதாவின் 32 வது வசனமும் மொழிபெயர்ப்பும், ஓடியோ இணைக்கப்பட்டுள்ளது).
8:45 - 8:47 வரை அமைதியாக இருந்து சப்தமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக துஆ செய்தல்.
8:47 - 8:55 வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான அனுதாபச் செய்தி. இதற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகளை பாவிக்கவும்.
வஸ்ஸலாம்.
அஷ-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2020/007
2020.04.21 (1441.08.27)
சென்ற வருடம் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக
கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திலே நம் நாட்டிலே மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நாட்டுமக்கள் அனைவரும் மிகுந்த கவலையுடன் நினைவுகூர்கின்ற இந்சந்தர்ப்பத்திலே நாமும் அவர்களுடன் இணைந்து எமது மன வேதனையையும் ஆழமான கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேநேரம், நடந்த அக்கொடூரமான செயலையும் நாம் மீண்டும் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த வேளையில் அக்கோர நிகழ்வுகள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் உளமார்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு சொந்தங்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு உள அமைதியும் வாழ்வில் அனைத்து வகையான நலன்களும் நிறைவாக கிடைக்கவேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
தமது வணக்கஸ்த் தலங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி பக்தர்களையும் ஏனைய பொது மக்களையும் படுகொலை செய்தமை இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. இதனைச் செய்தவர்கள் மனித குலத்தின் எதிரிகளாவர். இக்காரியத்தில் ஈடுபட்டோர் யாராக இருப்பினும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.
புனித அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அல்லாமல் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் உட்பட எந்த மதமும் வன்முறையை அனுமதிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், பொதுவாக எந்த மதத்தை எடுத்துக் கொண்ட போதிலும் மதத்தின் பெயராலேயே அதன் போதனைகளுக்கு முற்றிலும் முரணான மோசமான செயல்களிலும் நாசகார செயல்களிலும் ஈடுபடுபவர்கள் இருப்பதை நாம் காணலாம். எனினும் இது போன்ற ஒரு சில வழி தவறியவர்களின் மோசமான நடத்தையை அளவுகோலாக வைத்து எந்தவொரு மதத்தையோ அதனைப் பின்பற்றுபவர்களையோ மதிப்பீடு செய்வது நியாயமாகாது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இப்பயங்கர நிகழ்வையடுத்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் காத்திரமான முயற்சிகளை முன்னெடுப்பதில் முன்னின்று பங்காற்றிய சங்கைக்குரிய பேராயர் மல்கம் றஞ்சித் அவர்களுக்கும் பொறுமை காத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் நாம் அனைவரும் இத்தாய்த் திருநாட்டின் புதல்வர்கள் என்ற அடிப்படையில் நம்மிடையே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சுமுகமான முறையில் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதையும் நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
இலங்கையர்கள் என்ற ரீதியில் சமய, மொழி, பிரதேசம் உட்பட அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி நமது தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டிய காலம் வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்வோமாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாட்டை சகல விதமான ஆபத்துக்களிலிருந்தும் அனர்த்தங்களிலிருந்தும் காத்தருள்வானாக! சாந்தியும் சமாதானமும் நிலவும் அமைதிப் பூங்காவாக ஆக்கியருள்வானாக!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2020/005
2020.04.18 (1441.08.24)
கௌரவ அரபுக் கல்லூரி நிர்வாகிகளுக்கு…
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
அரபுக் கல்லூரிகளில் பணிபுரியும் கண்ணியமான உஸ்தாத்மார்கள் மற்றும் பணியாளர்களின் கொடுப்பனவு சம்பந்தமாக
கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் முழு உலகிலும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். இலட்சக்கணக்கானோர் இவ்வைரஸினால் பீடிக்கப்பட்டும், பலர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. மறுபுறம் பலரும் தம்முடைய அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள சிரமப்படுவதை நாம் காண்கின்றோம்.
அவ்வரிசையில், தங்களது நிர்வாகத்திற்குக் கீழ் இயங்கும் அரபுக் கல்லூரியில் மார்க்க அறிவைக் கற்றுக் கொடுக்கக்கூடிய கண்ணியமான உஸ்தாத்மார்கள் மற்றும் பணியாளர்கள் போன்றவர்களின் நிலைமைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எனவே, அந்தந்த ஊர்களில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளுடன் இணைந்து, ஊரிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் தங்களது அரபுக் கல்லூரியில் பணிபுரியும் உஸ்தாத்மார்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுடைய விடயத்தில் கவனம் செலுத்தி மாதாந்தக் கொடுப்பனவுகளை எவ்வித குறைவுமின்றி கொடுக்க முயற்சிக்குமாறு அரபுக் கல்லூரியின் நிர்வாகிகளிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் வேண்டிக்கொள்கிறது.
அரபுக் கல்லூரி உஸ்தாத்மார்கள் மற்றும் பணியாளர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகள் உரிய முறையில் கொடுக்கப்படாமலிருப்பதால் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதோடு, இவர்களில் ஸகாத் பெறத் தகுதியானவர்களை அடையாளங் கண்டு ஸகாத் வழங்கவும் முடியும் என்பதையும் ஜம்இய்யா தெரிவித்துக் கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரினதும் நற்கிரியைகளை கபூல் செய்வானாக, ஆமீன்.
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (2:261)
அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2020/003
17.04.2020 (23.08.1441)
அசாதாரண சூழலில் ரமழான் கால வழிகாட்டல்கள்
அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அருளியதன் மூலம் புனித ரமழான் மாதத்தை சங்கைப்படுத்தியுள்ளான். ரமழான் துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டல்களோடும் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபடும் மாதமுமாகும்.
கடந்த காலங்களை விட மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் நாம் இப்புனித ரமழான் மாதத்தை சந்திக்கவுள்ளோம். தற்போது உலகளாவிய ரீதியில் பரவிவரும் COVID 19 வைரஸின் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. எமது நாட்டு அரசாங்கமும் இதன் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் குறிப்பாக, மக்கள் ஒன்றுகூடுவதனை முற்றாக தடுத்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்.
எனவே, முஸ்லிம்களாகிய நாம் நாட்டு சட்டத்தை மதிப்பவர்கள் என்ற வகையில் ரமழான் காலத்தில் மேற்கொள்ளும் நல்லமல்களை பின்வரும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.
ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் வழிகாட்டல்களும்:
எனவே, இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் முழு உலகையும் பீடித்திருக்கும் இந்த கொரோனா வைரஸின் தீங்கிலிருந்து அனைவரையும் பாதுகாத்து நம் நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு மிளிர்ந்து, மக்கள் புரிந்துணர்வோடு வாழ நல்லருள் பாலிப்பானாக!
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2020/002
13.04.2020
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுச் செய்தி
இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்களின் கலாசார மற்றும் மிக முக்கிய தினமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை, கடந்த வருடங்களைப் போன்று இந்த ஆண்டில் கொண்டாட முடியாத சூழ்நிலை கொரோனா வைரஸின் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது.
இந்தப் புத்தாண்டின் விடியலுடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி எமது தாய்நாட்டை இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இந்தத் தொற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக பாடுபடும் அரசாங்கம், அரசாங்க சேவைகளின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இந்த நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கும் சுகாதார சேவைகளின் பணியாளர்கள், முப்படைகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா