23.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பரீத் அவர்களின் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை திருகோண மலை மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா