14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி அவர்களின் தலைமையில் பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வாவில் நடைபெற்றது. இவ்வொன்று கூடலில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாகவும், தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள சமய ஆசிரியர் நியமனத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா