அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி
25.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று மாவட்ட கிளை காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா