10.12.2018 அன்று பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர். இதன் போது பல்ஸதீன் நாட்டினதும், பைத்துல் மக்திஸினதும் நிலமைகளை விவரித்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா