ACJU/NGS/2023/143
2023.05.22 (1444.11.01)
காலி மாவட்டத்தின் பலபிட்டிய பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலீபத்துஷ் ஷாதுலிமர்ஹூம் அஷ்ஷைக் ஸுல்தான் ஏ. முஹ்யத்தீன் பஹ்ஜி (همحري الله) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார், 2023.05.22 ஆம் திகதி தனது 67 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் காலி கோட்டை அல் பஹ்ஜத்துல் இப்றாஹீமிய்யாவில் 1981 இல் பட்டம்பெற்றவராவார்கள். அந்நாளிலிருந்து வெலிகமை அல் மத்ரஸத்துல் முர்ஸிய்யத்துல்
அறபிய்யாவில் வபாத் ஆகும் வரை அதிபராகக் கடமையாற்றினார்கள்.
அனைவருடனும் பண்பாகவும் பணிவோடும் பழகக்கூடிய அவர்கள் கற்பித்தலில் மிகத் திறமையும்தேர்ச்சியும் கொண்டவர்களாக மிளிர்ந்தார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும்அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை
வழங்குவானாக.
اللَّهُمَّ لا تحرمنا أجره، ولا تفتنّا بعده، واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே.அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும் அவரையும்மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா