13.06.2016 (07.09.1437)
வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்துவோம்
வாக்குரிமை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையினதும் உரிமையாகும். அதனை பெற்றுக்கொள்வதும், உரிய முறையில் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த விடயத்தில் நம்மில் சிலர் பொடுபோக்காகவும் கவனக்குறைவாகவும் நடந்துக்கொள்கின்றனர். அதன் காரணமாக உத்தியோகபூர்வமான சில காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு சிரமப்படுவது மட்டுமல்லாமல், அதற்காக அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவதையும் சில சமயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், காணி மற்றும் வீடு போன்றவற்றை பதிதல் போன்ற பல விடயங்களிலும் வாக்களர் பதிவு அவசியப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாம் கூடுதல் கரிசனையோடு நடந்துகொள்ளவேண்டும்.
இந்த மாதம் வாக்காளர் பதிவுக்கான மாதமாகும். 18 வயதை அடைந்த ஒவ்வொருவரும் வாக்காளராக பதிவு செய்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.
தம் பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள் மூலம் வாக்காளர் பதிவின் அவசியம் பற்றி விழிப்புணர்வூட்டுமாறு நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல் நிர்வாகிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது. மேலும் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து அதற்கான படிவங்களைப் பெற்று அதனை நிரப்பி ஒப்படைக்குமாறு அனைவரையூம் ஜம்இய்யா கேட்டுக்கொள்கின்றது.
வஸ்ஸலாம்
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
கௌரவ பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா